இடுகைகள்

கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்லாஹ்........

அல்லாஹ்....... எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! படைப்பதும் - துயர் துடைப்பதும் என் தொழில். நானே தொட்டில் நானே சவப்பெட்டி! ஏற்றமும்,இறக்கமும்  நானே! நீரும்,நெருப்பும் நானே! பிறப்பும், அழிவும் என்னில் என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! உரிமையளிப்பதும் நானே! மன்னிப்பளிப்பதும் நானே! என்னை இறைஞ்சினால் இறங்கிவருவேன் - என்னை மறந்து போனாலும் - நான் மறப்பதில்லை! மறுப்பதில்லை!! எனக்கு இங்கே நேர் - எதிர் மனிதன்!! கேள்வியும் நானே பதிலும் நானே ஆதியும் நானே அந்தமும் நானே என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! கமுதி மீராபட்டேல் ரஹ்மத் மாத இதழ், மே - 1994

அழகுயர் திருநோன்பு!

படம்
அழகுயர் திருநோன்பு! நோன்பு........ பூவிதழாய் நற்செயலை                                       பூமிதனில் துலங்கிடவே புகழ்மிக்க இறையோனை                                      போற்றி தினம் வணங்கிடவே; பொற்புடைய நல்வாழ்வு                                      புனிதமுடன் விளங்கிடவே பூந்தென்றல் எழிலுருவாய்                                      புவிசிறக்க வந்ததுவே! நோன்பு...... துன்பம் துயரகற்றி                                    தூக்கம் உணவகற்றி தொண்டின் தூய்மை நெறி   ...

பிழை பொறுப்பாய் ரஹ்மானே!

படம்
பிழை பொறுப்பாய் ரஹ்மானே! இறை தந்தான் மாதங்கள்                        எல்லாமே நல்லவைதான்! குறையில்லை என்றாலும்                      குறிப்புடனே ரமழானை நிறைவுடனே தனதென்றான்                      நிகரில்லா நன்மை சேர் மறை தந்தான் இந்நாளில்                     மகத்துவமோ மிகப்பெரிதே! எத்தனையோ இராப்பகல்கள்                    இயங்கிவரும் பூவுலகில் அத்தனையும் அல்லாஹ்வின்                   அருட்கொடையே என்றாலும் சித்தமதை நோன்பாலே                   சீர்படுத்தும் ரமழான்தான் அத்தனைக்கும் மகுடமென்றே                   ஆக்கிவைத்தான் அருளா...