நோயும்,நலம் விசாரித்தலும்
நோயும், நலம் விசாரித்தலும் அன்பிற்குரியவர்களே! நோய் என்பதும் ஆரோக்கியம் என்பதும் இறைவன் நமக்கு அளித்தஅருட்கொடை. இரண்டையுமே இறைவன் நமக்கு தந்து சோதிக்கின்றான். நோயுடன் இருப்பவர் அல்லாஹ் இந்த நோயின் மூலமாக நம் பாவங்களை மன்னிக்கின்றான். என்பதை நோயாளியும் உணர்வதில்லை ஆரோக்கியமாக இருப்பவர் தன் ஆரோக்கியம் குறித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஒரு நோயாளிக்குதான் ஆரோக்கியத்தின் அருமை தெரியும். அல்லாமா ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமுள்ளவனின் தலையில் உள்ள கிரீடத்தைப் போன்றது. அதன் அழகை அவன் அறியமாட்டான். எதிரில் வரும் நோயாளியே அறிந்து கொள்வார். என்று கூறினார்கள். ஆகவே, ஆரோக்கியம் உள்ளவர்கள் ஆரோக்கியம் தந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, மேலும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மகத்தான இரு நிஃமத்துகளை தந்திருக்கிறான். அந்த இரு நிஃமத்...