இடுகைகள்

சட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

படம்
குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)                           அன்பிற்குரியவர்களே! இஸ்லாத்தில் இரண்டே இரண்டு ஈதுப் பெருநாட்கள் மட்டுமே உள்ளன. அவ்விரண்டில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இவ்விரு பெருநாட்களிலும் தனித்தனியான இபாதத்துகள் (வணக்கங்கள்) உண்டு. அதனடிப்படையில் நம்மை எதிர்நோக்கி வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான இபாதத்துதான் குர்பானி ஆகும். உழ்ஹிய்யா (குர்பானி) என்றால் என்ன?                இஸ்லாமிய மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்பது குறிப்பிட்ட  நாளில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய உயிரினங்களிலிருந்து அறுக்கப்படும் பிராணிக்கு  உழ்ஹிய்யா எனக்கூறப்படும். அந்த நாளை ஈதுல் அழ்ஹா என்றழைக்கப்படும். குர்பானியின் சட்டம் என்ன?                                         குர்பானி கொடுப்பது ஹன...

தராவீஹ்..! வேலூர் அல்-பக்கியாத்துஸ் ஸலிஹாத் தீர்ப்பு!

படம்
தராவீஹ்..! வேலூர் அல்- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் தீர்ப்பு!            அன்பிற்குரிய இஸ்லாமிய சொந்தங்களே! வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்கு விளக்கம் வேண்டி ஒருவர் ஃபத்வா கேட்கிறார். கேள்வி:        “சிலர் தராவீஹ் தொழுகை 8 ரக் அத்கள்தான் எனக்கூறி அதற்கு புகாரி ஷரீஃபை ஆதாரம் காட்டுகின்றனர். அத்துடன் 20 ரக்அத்துகள் என்பதை கடுமையாக எதிர்த்து இருபது ரக்அத் தொழுவோருக்கு மாற்றம் செய்து குழப்பம் செய்கின்றனர்.”         இதைப்பற்றி மார்க்க அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்?            ”தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்களா? அல்லது இருபது ரக்அத்களா? இவ்விரண்டில் எது சரியானது என்பது பற்றி உறுதியான முறையில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.” பதில்:          ”சரியான (பதில் கொடுப்ப)தற்கு தவ்ஃபீக் செய்பவன் அல்லாஹ்வே!”           புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபுதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் தராவீஹ் தொழுகை (ரக் அத்)களின் எண்ணிக்கை ப...

இஃதிகாஃப் அதன் சட்டங்கள்

படம்
இஃதிகாஃப் அதன் சட்டங்கள்                           அன்பான சகோதரர்களே! இந்த பதிவில் நாம் இஃதிகாஃப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம். இஃதிகாஃப் மொத்தம் மூன்று வகைப்படும்: 1. இஃதிகாஃப் மஸ்னூன்(சுன்னத்தாக்கப்பட்ட இஃதிகாஃப்) 2. இஃதிகாஃப் நஃபில் (நஃபிலான இஃதிகாஃப்) 3. இஃதிகாஃப் வாஜிப் (வாஜிபான இஃதிகாஃப்)   I. சுன்னத்தான இஃதிகாஃப்                       ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் கடைபிடிக்கப்படும் இஃதிகாஃபிற்கு சுன்னத்தான  இஃதிகாஃப்   எனக் கூறப்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில்   இஃதிகாஃப் இருந்துள்ளர்கள்.  இதன் நேரம்:               ரமளானின் 20 ஆம் நோன்பு நிறைவுபெறுகின்ற நாளின் சூரிய மறைவிலிருந்து பெருநாளின் பிறை தென்படும் வரை நீடித்திருக்கும். எனவே இந்த   இஃதிகாஃபை கடைபிடிக்க நினைப்பவர்கள் பிறை 20 மஃரிப்பிற்கு முன் மஸ்ஜிதின் எல்லைக்குள...

நோயும்,நலம் விசாரித்தலும்

படம்
நோயும், நலம் விசாரித்தலும்                                அன்பிற்குரியவர்களே! நோய் என்பதும் ஆரோக்கியம் என்பதும் இறைவன் நமக்கு அளித்தஅருட்கொடை. இரண்டையுமே இறைவன் நமக்கு தந்து சோதிக்கின்றான். நோயுடன் இருப்பவர் அல்லாஹ் இந்த நோயின் மூலமாக நம் பாவங்களை மன்னிக்கின்றான். என்பதை நோயாளியும் உணர்வதில்லை ஆரோக்கியமாக இருப்பவர் தன் ஆரோக்கியம் குறித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஒரு நோயாளிக்குதான் ஆரோக்கியத்தின் அருமை தெரியும்.   அல்லாமா ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமுள்ளவனின் தலையில் உள்ள கிரீடத்தைப் போன்றது. அதன் அழகை அவன் அறியமாட்டான். எதிரில் வரும் நோயாளியே அறிந்து கொள்வார். என்று கூறினார்கள்.        ஆகவே, ஆரோக்கியம் உள்ளவர்கள் ஆரோக்கியம் தந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, மேலும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்.  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மகத்தான இரு நிஃமத்துகளை தந்திருக்கிறான். அந்த இரு நிஃமத்...