இடுகைகள்

நல்லோர்களும் ,நாமும் ஒன்றா?

படம்
நல்லோர்களும், நாமும் ஒன்றா? قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ  عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا     (السورة ورقم الآية:  الكهف (110).                     மனித சமூகத்தை பல கோத்திரங்களாக, பல பிரிவுகளாக,  நிறத்தால், அமைப்பால், பொருளாதாரத்தால், மொழியால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு அல்லாஹ் படைத்திருந்த போதும் மனிதர்கள் அனைவர்களின் மீதும் தன் கருணையை, அன்பை உலகில் சமமாகவே அருளுகிறான். எனினும் யார் தன்னுடைய கட்டளைகளை உலகில் செவி தாழ்த்தி, அடிபணிந்து,உலகப்பற்றற்று வாழ்கிறார்களோ அவர்களின் மீது தனிப்பெரும் அன்பை பொழிகிறான். அப்படி அல்லாஹ்வால் தனிப்பெரும் அன்பு போற்றப்பட்ட நபிமார்கள் இன்றளவிலும் நம்மோடு வாழுகிற  எத்தனையோ நல்அடியார்கள் அல்லாஹ்வின் பேரன்பில் இருக்கிறார்கள்.                            ...

இஃதிகாஃப் அதன் சட்டங்கள்

படம்
இஃதிகாஃப் அதன் சட்டங்கள்                           அன்பான சகோதரர்களே! இந்த பதிவில் நாம் இஃதிகாஃப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம். இஃதிகாஃப் மொத்தம் மூன்று வகைப்படும்: 1. இஃதிகாஃப் மஸ்னூன்(சுன்னத்தாக்கப்பட்ட இஃதிகாஃப்) 2. இஃதிகாஃப் நஃபில் (நஃபிலான இஃதிகாஃப்) 3. இஃதிகாஃப் வாஜிப் (வாஜிபான இஃதிகாஃப்)   I. சுன்னத்தான இஃதிகாஃப்                       ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் கடைபிடிக்கப்படும் இஃதிகாஃபிற்கு சுன்னத்தான  இஃதிகாஃப்   எனக் கூறப்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில்   இஃதிகாஃப் இருந்துள்ளர்கள்.  இதன் நேரம்:               ரமளானின் 20 ஆம் நோன்பு நிறைவுபெறுகின்ற நாளின் சூரிய மறைவிலிருந்து பெருநாளின் பிறை தென்படும் வரை நீடித்திருக்கும். எனவே இந்த   இஃதிகாஃபை கடைபிடிக்க நினைப்பவர்கள் பிறை 20 மஃரிப்பிற்கு முன் மஸ்ஜிதின் எல்லைக்குள...

நோயும்,நலம் விசாரித்தலும்

படம்
நோயும், நலம் விசாரித்தலும்                                அன்பிற்குரியவர்களே! நோய் என்பதும் ஆரோக்கியம் என்பதும் இறைவன் நமக்கு அளித்தஅருட்கொடை. இரண்டையுமே இறைவன் நமக்கு தந்து சோதிக்கின்றான். நோயுடன் இருப்பவர் அல்லாஹ் இந்த நோயின் மூலமாக நம் பாவங்களை மன்னிக்கின்றான். என்பதை நோயாளியும் உணர்வதில்லை ஆரோக்கியமாக இருப்பவர் தன் ஆரோக்கியம் குறித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஒரு நோயாளிக்குதான் ஆரோக்கியத்தின் அருமை தெரியும்.   அல்லாமா ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமுள்ளவனின் தலையில் உள்ள கிரீடத்தைப் போன்றது. அதன் அழகை அவன் அறியமாட்டான். எதிரில் வரும் நோயாளியே அறிந்து கொள்வார். என்று கூறினார்கள்.        ஆகவே, ஆரோக்கியம் உள்ளவர்கள் ஆரோக்கியம் தந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, மேலும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்.  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மகத்தான இரு நிஃமத்துகளை தந்திருக்கிறான். அந்த இரு நிஃமத்...

இமாம் புஹாரி (ரஹ்)

படம்
இமாம் புஹாரி (ரஹ்) உலகின் தலைசிறந்த நூல் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا                                                                                               كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ   ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் தனது இறுதிப் பேருரையில் நபிமுஹம்மது (ஸல்) அவர்கள் அருளிய வார்த்தை: நான் இரண்டு விஷயங்களை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழிகேட்டில் செல்லமாட்டீர்கள். அந்த இரண்டு விஷயம் ஒன்று அல்லாஹ்வின் திருவே...

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

படம்
பரிந்துரைத்தல்   مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا 4:85