பிரார்த்தனை செய்வோம்
பிரார்த்தனை செய்வோம் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும், கண்ணியமானவர்களே! உலகத்தார்க்கு அல்லாஹ் பல பொக்கிஷங்களை அருளியிருக்கிறான். அதிலே ஒன்றுதான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது. ஏனெனில் அல்லாஹ் ஆரம்பமாக தாயின் கருவறையிலே ஒரு மலக்கை நியமித்து அந்த கரு ஆணா? பெண்ணா?, நல்லவனா? கெட்டவனா? அதன் உணவு, மறைவு அதன் பண்புகள் , அது பெறும் அந்தஸ்த்துகள் ஆகியவற்றை தக்தீராக அமைக்கச் செய்கிறான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக நமக்குத் தெரிகிறது. அப்படியிருக்க முடிவு செய்யப்பட்ட தக்தீரை மாற்ற உலகில் யாருக்கும் சக்தி இல்லை. இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் இப்படியும் சொல்வார்கள், (முடிவு செய்யப்பட்ட தக்தீரை துஆவைத் தவிர வேறு எதனாலும் மாற்ற இயலாது) இந்த நபிமொழியின் கூற...